சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் விதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்‍க திருச்சி மகிளா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் 7 நாள் காவலில் எடுத்து யூடியூபர் சவுக்கு சங்கரை விசாரிக்‍க அனுமதிக்‍குமாறு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி 
ஜெயப்பிரதா ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை 4 மணி வரை விசாரணை நடத்தி விட்டு சவுக்கு சங்கரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Night
Day