சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது. 

பெண் போலீசாரை அவதூறாக விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் - சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் வேறு வழக்குகளில் தேவைப்படாவிட்டால் உடனடியாக அவரை விடுதலை செய்யவேண்டும், இவ்வழக்கில் அவருக்கு தண்டனை பெற்று தரலாமே தவிர குண்டர் சட்டத்தில் அடைக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது தவறானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Night
Day