சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வந்த பயணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணியிடம் இருந்து ஒரு கோடியே 16 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பயணி ஒருவர் கால் வலிக்கு பேண்டேஜ் அணிந்து, அதில் மறைத்து வைத்து தங்க கட்டி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள சுமார் ஒன்றரை கிலோ எடைகொண்ட தங்கக்கட்டியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day