சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான 9 பேரிடம் விசாரணை - மேலும் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் ஒரு சிறுமியும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உடுமலை பகுதியில் தாத்தா, பாட்டியுடன் வசித்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 13 வயதுடைய மற்றொரு சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமாகி உள்ளது. இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா? என போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day