சிவகங்கை: சட்ட விரோதமாக செயல்பட்ட மதுபான ஆலைக்கு சீல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சட்ட விரோதமாக செயல்பட்ட மதுபான ஆலையில் 3ஆயிரம் 500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. குமரத்துகுடிபட்டி அருகில் உள்ள அடர்ந்த வன பகுதியில் சிங்கம்புணரியை சேர்ந்த மங்கலம் என்ற 45 வயது மதிக்கத்தக்க பெண், ரகசியமாக சட்டவிரோத மதுபான ஆலை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலின் பேரில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மதுவிலக்கு போலீசார் அங்கிருந்த சுமார் 3ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம், 10 லட்சம் மதிப்பிலான மூலப் பொருட்களை பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்தனர்.  அதை தொடர்ந்து  மதுபான ஆலை நடத்திய மங்கலம் உள்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day