சிவகங்கை: 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். தேவகோட்டை ராம்நகரில் விக்னேஸ்வரன் என்பவர் கம்பியூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இரவு நேரத்தில் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர், பணத்தை திருடி சென்றுள்ளார். இதேபோல் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Night
Day