சிவகாசி - மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் பரபரப்பு நிலவியது.

சிவகாசி அருகே நாரணாபுரம் புதூர் பகுதியில் மகேஸ்வரி என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் அறையில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டபோது தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கபட்டுள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி மருத்து உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 6 பெண்கள் உட்பட 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Night
Day