சிவசேனா பிரமுகர் மீது பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு : காவல்நிலையத்திலேயே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் பதற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரவில் காவல் நிலையத்தில் ஷிண்டே தரப்பு சிவசேனா பிரமுகர் மீது பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தகராறு தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் மகேஷ், பாஜக எம்எல்ஏ கணேஷ் இடையே  உலாஸ்நகரில் உள்ள ஹில்லைன் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில், மகேஷ் மீது பாஜக எம்எல்ஏ கணேஷின் ஆதரவாளர்கள் 4 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த மகேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Night
Day