சுற்றுலா பயணிகள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். 

சென்னையில் இருந்து ஏற்காட்டை சுற்றி பார்க்க 15 பேர் கொண்ட குழுவினர் வேனின் சென்று கொண்டிருந்தனர். ஏற்காடு மலைப்பாதையில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் பயணித்த 15பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day