செங்கல்பட்டு: இரட்டிப்பு வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி - தம்பதி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே இரட்டிப்பு வட்டி கொடுப்பதாக ஆசைவார்ததை கூறி ஐந்து கோடியே ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினா் கைது செய்தனா். பட்டிபுலம் மீனவர் பகுதியை சேர்ந்த ராஜா- துளசி தம்பதியினா் , அப்பகுதி மக்களிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் ஒரு மாதத்தில் இரண்டு லட்ச ரூபாயாக இரட்டிப்பு பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வசூல் செய்துள்ளனா். இந்நிலையில் சீட்டு முதிர்வு அடைந்தவர்கள், தாங்கள் செலுத்திய பணத்தை கேட்க ஆரம்பித்தவுடன் ராஜா-துளசி தம்பதியினர் தலைமறைவாகினர். பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், மாமல்லபுரம் காவல்துறையினா் பட்டிபுலத்தில் இருந்த ராஜா-வை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Night
Day