செங்கல்பட்டு: இளைஞர் கொலை - காதலியின் சகோதரா்கள் உட்பட 3 பேர் காவல்நிலையத்தில் சரண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாம்பரம் அருகே மயான பகுதியில் காதல் விவகாரத்தால் நடைபெற்ற கொலை சம்பவத்தில் காதலியின் சகோதரர்கள் உட்பட மூன்று பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள மயான பகுதியில் மேளம் அடிக்கும் வேலை பார்த்து வந்த ஜீவா என்ற இளைஞர் மர்ம நபர்களால் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜீவாவை கொலை செய்ததாக அவரது காதலியின் சகோதரர்கள் விஜய், அஜித் மற்றும் அவர்களின் நண்பர் அரவிந்தன் ஆகிய மூன்று பேரும் பெருங்களத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜீவாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Night
Day