செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 43வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது நீதிமன்ற காவல் இன்றோடு நிறைவடைந்தது. இதனையடுத்து காணொலி காட்சி மூலமாக அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூலை 8 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

varient
Night
Day