சென்னையில் ரூ. 1.18 கோடி பறிமுதல் - ஹவாலா பணமா என விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நொளம்பூர் பகுதியில் ஹவாலா பணம் என சந்தேகிக்கப்படும் ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் மற்றும் 700 கிராம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை நொளம்பூர் VGN தெரு பகுதியில் மலேசியாவைச் சேர்ந்த அப்துல் ஹமீது மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மொகமது அராபத் ஆகியோரிடம் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அமைந்தகரை போலீசார், ஒரு கோடியே 18 லட்சம் பணம் மற்றும் 705 கிராம் தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நகை மற்றும் பணம் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, பிடிபட்ட இருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Night
Day