சென்னை அருகே பழிக்கு பழியாக இளைஞர்கள் மாறிமாறி வெட்டிக்கொண்ட கொடூரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் இளைஞர்கள் மாறி மாறி அரிவாளால் வெட்டிக் கொள்ளும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வள்ளலார் நகரைச் சேர்ந்த மணிகண்டனின் செல்போனை கேட்டு, அதேபகுதியைச் சேர்ந்த வெங்கடேசனும், அவரது நண்பர் ஆதிகேசவனும் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் லேசாக காயமடைந்த மணிகண்டன் தனது நண்பர்களுக்கு தகவல் அளித்த நிலையில், மணிகண்டனின் நண்பர்கள் 7 பேர் சேர்ந்து வெங்கடேசனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிந்த திருமுல்லைவாயல் போலீசார், இருதரப்பையும் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

Night
Day