சென்னை கோயம்பேட்டில் தீவிரவாதி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேட்டில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.

'அன்சார் அல் இஸ்லாம்' என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஹபிபுல்லா என்ற பயங்கரவாதியை மேற்கு வங்க போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அனோகர் என்பவர் சென்னையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் மேற்கு வங்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் சென்னை கோயம்பேடு அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த அனோகரை மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள அனோகர்  'அன்சார் அல் இஸ்லாம்' என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என மேற்கு வங்க போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பு அல்கொய்தா மற்றும் வங்கதேச நாட்டிற்கு ஆதரவாக செயல்படும் தீவிரவாத இயக்கம் என மேற்கு வங்க போலீசார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனோகர் மீது இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க நினைத்தல் மற்றும் அரசுக்கு எதிராக சட்ட விரோத செயல்களில் ஈடுபட நினைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மேற்குவங்க போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Night
Day