க்ரைம்
சாராயம் காய்ச்சுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன"
மாவட்டந்தோறும் சாராயம் காய்ச்சுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? -அ?...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள காத்திருப்போர் அறைக்கு செல்லும் பாதையின் ஓரத்தில் துப்பட்டா மூலம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, காவல்நிலையத்துக்கு புகாரளித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த பெண் கேரளாவை சேர்ந்த ரேஷ்மா என்பதும், இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. தாய் உயிரிழந்த துக்கத்தை தாங்க முடியாமல் ரேஷ்மா தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
மாவட்டந்தோறும் சாராயம் காய்ச்சுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? -அ?...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...