சென்னை மேற்கு மாம்பலம் : மகன், மகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை, தானும் தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மேற்கு மாம்பலத்தில் மகன் மற்றும் மகளை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த மோகன் - யமுனா என்ற தம்பதியினருக்கு, 13 வயதில் சாய் ஸ்வாதி என்ற மகளும், 5 வயதில் தேஜஸ் என்ற மகனும் இருந்தனர். யமுனா வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததால், மோகன் தனது இரு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்று யமுனா கூறியதால், மோகன் கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இதனிடையே, யமுனா மீண்டும் தவறான செயலில் ஈடுபட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த மோகன், யமுனா பணிக்கு சென்றிருந்த நேரத்தில், தனது மகன் மற்றும் மகளை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவலறிந்து சென்ற போலீசார், 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day