சென்னை - போலீசாரின் வாகன தணிக்கையில் 28 கிலோ தங்கம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெரினா காமராஜர் சாலை அருகே வாகன தணிக்கையின் போது காரில் கொண்டு வரப்பட்ட 28 கிலோ தங்கத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

சென்னை காமராஜர் சாலை பகுதியில் காவல்துறையினர் வாகனத்தணிக்‍கை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 28 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 
காரை பால் என்பவர் ஓட்டி வந்துள்ளார். மேலும் காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்திய அண்ணா சதுக்கம் காவல்துறையினர், நகைக்குரிய பில்கள் இருந்தாலும் அவற்றை ஆயிரம் விளக்கு வணிகவரித்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைத்தனர்.

Night
Day