சென்னை : கபாலீஸ்வரர் கோவில் வாசல் முன்பு தீவைத்த நபர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வாசல் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த 6ம் தேதி இரவு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வாசலில் ஒருவர் அமர்ந்து, பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்தார். இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது அனகாபுத்தூரை சேர்ந்த தீனதயாளன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பாரிமுனையில் வைத்து போலீசார் கைது செய்தனர். 

Night
Day