க்ரைம்
பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றச்சாட்டு..!...
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீச...
சென்னையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர், ஜல்லடையான்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் 4 மாதங்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்றிரவு பள்ளிக்கரணையில் உள்ள மதுபான விடுதிக்கு சென்ற பிரவீனை, ஷர்மியின் சகோதரர் தினேஷ் உட்பட 4 பேர் கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து தினேஷ் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீச...
சேலத்தில், போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் 6வது கிளை இன்று திறக்கப்பட்ட நிலையில், ?...