சென்னை : புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலாராக பணியாற்றிய சுரேஷ் குடும்பத்துடன் புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று சுரேஷின் மனைவி மற்றும் பிள்ளைகள் ஊருக்கு சென்ற நிலையில், இரவு தனது சகோதரருடன் சுரேஷ் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று பணிக்கு வராததால், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக எழும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

Night
Day