சென்னை : மாதவரம் பேருந்து நிலையத்தில் இருக்கையில் உறங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு : ஒருவர் கல்லால் அடித்துக் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருக்கையில் உறங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். 

பாரதியார் தெருவை சேர்ந்த வேளவேந்தன் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த கூழி தொழிலாளி சிவசங்கரனும் மது அருந்திவிட்டு மாதவரம் பேருந்து நிலையத்தின் உள்ளே இருந்த இருக்கையில் உறங்க சென்றுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே இருக்கையில் யார் உறங்குவது என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சிவசங்கரன் இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த வேளவேந்தனை, கல்லால் அடித்துள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட வேளவேந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day