சென்னை : 2-வது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட முதியவர் வீட்டில் கொள்ளை - 2 பெண்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூரில் 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட முதியவர் வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவொற்றியூர் மேற்கு மாடவீதி தெரு பகுதியை சேர்ந்த 60 வயதான ஆனந்தன் என்பவா் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டி, திருமண தகவல் மையத்தில் பெண் தேடியுள்ளார். அப்போது திருச்சியை சேர்ந்த சித்ரா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி சித்ரா தனது சகோதரியான முத்துலட்சுமியுடன் ஆனந்தனை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்று ஒரு நாள் அங்கே தங்கிவிட்டு திரும்பியுள்ளனர். அவர்கள் சென்றதும், பீரோவை திறந்து பார்த்த போது, 15 சவரன் தங்க நகை மற்றும் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் திருடி சென்றுயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினா் 2 பெண்களை கைது செய்து பணம் மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா். 

Night
Day