சென்னை: உணவகத்தில் மாமூல் கேட்டு கடையை சூறையாடிய ரவுடி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தேனாம்பேட்டை அருகேயுள்ள உணவகத்தில் மாமூல் கேட்டு கடையை சூறையாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். தேனாம்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், டிடிகே சாலையில் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 11ம் தேதி உணவகத்திற்கு வந்த ரவுடி மணி என்பவர் உணவகத்தில் உணவு சாப்பிட்டு பணம் கொடுக்க மறுத்ததோடு, சதீஷ்குமாரிடம் மாமூல் கேட்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், கடையை சூறையாடி கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 27 ஆயிரம் ரூபாயை மணி எடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடி மணியை போலீசார் கைது செய்தனர். 

Night
Day