சென்னை: ஓடும் ரயிலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபருக்கு தர்ம அடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஓடும் ரயிலில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை பயணிகள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லக்கூடிய மின்சார ரயிலில்  கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறிய நபர் ஒருவர் பயணியிடம் செல்போன் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டார். இதில் பாதிக்கப்பட்டவர் கூச்சலிடவே, சுற்றி இருந்த பயணிகள் அந்த நபரை கண்டறிந்து, தர்ம அடி கொடுத்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Night
Day