சென்னை: கிரகப்பிரவேச வீட்டில் பிரச்னை செய்த 2 திருநங்கைகள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா நகரில் கிரகப்பிரவேச வீட்டில் திருஷ்டி கழிப்பதாக கூறி பணம் கேட்டு பிரச்னை செய்த இரண்டு திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். அண்ணா நகர், 8 வது தெருவில் சபரி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் அலுவலகத்திற்காக புதிய அடுக்குமாடி கட்டட கிரேக பிரேவேச விழா நடைபெற்றது. அப்போது அங்கு சென்ற 5 திருநங்கைகள் திருஷ்டி கழிப்பதாகக் கூறியுள்ளனர். அங்கு இருந்தவர்கள் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில், கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு திருநங்கைகள் பிரச்சனையில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது சஞ்சனா என்பவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் ரோஸி, லல்லி ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் தப்பிஓடிய மற்ற 3 நபர்களை தேடி வருகின்றனர். 

Night
Day