க்ரைம்
ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
சென்னை அண்ணா நகரில் கிரகப்பிரவேச வீட்டில் திருஷ்டி கழிப்பதாக கூறி பணம் கேட்டு பிரச்னை செய்த இரண்டு திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். அண்ணா நகர், 8 வது தெருவில் சபரி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் அலுவலகத்திற்காக புதிய அடுக்குமாடி கட்டட கிரேக பிரேவேச விழா நடைபெற்றது. அப்போது அங்கு சென்ற 5 திருநங்கைகள் திருஷ்டி கழிப்பதாகக் கூறியுள்ளனர். அங்கு இருந்தவர்கள் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில், கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு திருநங்கைகள் பிரச்சனையில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது சஞ்சனா என்பவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் ரோஸி, லல்லி ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் தப்பிஓடிய மற்ற 3 நபர்களை தேடி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...