சென்னை: குளியலறையில் ரகசிய கேமரா வைத்து ஆபாச படமெடுக்க முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராயபுரத்தில் குளியலறையில் ரகசிய கேமரா வைத்து பெண்ணை ஆபாச படமெடுக்க முயன்ற பல் மருத்துவ மாணவரை போலீசார் கைது செய்தனர். ராயபுரம் மேற்கு மாதா தேவாலய சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 30 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இந்த நிலையில் அப்பெண் வசிக்கும் வீட்டின் குளியலறையில் spy camera pen வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து ராயபுரம் போலீசில் புகாரளித்துள்ளார். போலீசாரின் விசாரணையில் வீட்டு உரிமையாளரின் மகனான பல் மருத்துவ மாணவர் இப்ராஹிம் ரகசிய கேமராவை பொருத்தி ஆபாச படமெடுக்க முயன்றது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இப்ராஹிமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Night
Day