சென்னை: செல்போன் கடை, துணிக்கடைகளின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை குரோம்பேட்டையில் கடைகளின் சுவர்களில் துளையிட்டு 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டை சிக்னல் அருகே அண்ணன், தம்பிகளான அன்சாரி, மன்சூர் ஆகியோர் செல்போன் மற்றும் துணிக்கடைகளை நடத்தி வருகின்றனர். இந்த 2 கடைகளின் பக்கவாட்டு சுவர்களிலும் துளையிட்டு, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களும், துணிக்கடையில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும்மர்ம நபர்கள் கொள்ளையடித்து  சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day