சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது திமுகவினர் தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை தாக்கிய சம்பவத்தில் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். நுங்கம்பாக்கம் காம்தார் நகரை சேர்ந்த திமுக செயலாளரான சிற்றரசு என்பவரின், அலுவலக கட்டிடத்துக்கு கீழ் உள்ள கொரியர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனை உறுதிப்படுத்தவதற்காக தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த திமுக நிர்வாகிகள் எதற்காக இங்க வந்தீர்கள் என கூறி செந்திலின் கேமராவை பறித்ததோடு, அவரை கொடூரமாக தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, செந்தில் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட திமுக பெண் நிர்வாகி உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கலைச்செல்வன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day