க்ரைம்
செந்தில் பாலாஜி அக்டோபர் 1-ல் நேரில் ஆஜராக உத்தரவு
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்...
சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் தலைமை செயலகத்தில் சோதனை மேற்கொண்டபோது, அது வதந்தி என தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரை கைது செய்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் சமீப காலமாக மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...