சென்னை: தேர் ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கேகே நகரில் நடைபெற்ற தேர் ஊர்வலத்தின்போது பெட்ரோல் குண்டுகள் வீசி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் அராஜகத்தில் ஈடுபட்டனர். சித்ரா பௌர்ணமியையொட்டி கேகே நகரில் உள்ள கங்கையம்மன் கோயிலின் தேர் ஊர்வலத்தின்போது, மதுபோதையில் இருந்த கோபி உட்பட இருவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற மணிகண்டன் என்பவர் மீது கத்தி மற்றும் பெட்ரோல் குண்டு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க முயற்சித்ததால், உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக தகராறில் ஈடுபட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day