சென்னை: நின்றிருந்த ஆட்டோவை கல்வீசி தாக்கிய மர்ம நபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வண்ணாரப்பேட்டையில் நின்றிருந்த ஆட்டோவை போதை ஆசாமி கல்வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.சி சாலையில் சுரேஷ் என்பவர், தனது ஆட்டோவை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு அருகே இருந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் ஆட்டோவின் கண்ணாடியை கல்வீசி தாக்கியுள்ளார். இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day