சென்னை: பால் விநியோக கடையில் பால் பாக்கெட்டுகள் திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூர் அருகே பால் விநியோக கடையில் பால் பாக்கெட்டுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. வன்னியர் தெரு பகுதியில் அமைந்துள்ள மொத்த பால் வினியோக கடையின் வாசலின் முன்பு விற்பனைக்காக பால் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைந்து போனதால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் அங்கிருந்த கண்காணிப்ப கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.  அதில், இரண்டு நபர்கள் பால் பாக்கெட்டுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், மர்ம நபர்கள் குறிதுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day