சென்னை: பெண் காவலரின் கையை உடைத்த போதை ஆசாமி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேட்டில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பீர்பாட்டிலை கண்டுபிடித்து தரும்படி பெண் போலீசின் கையை உடைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு தினந்தோறும், ஏராளமான மக்கள் வந்து மரியாதை செலுத்தி செல்கின்றனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு அங்கு தினசரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், போக்குவரத்து பெண் காவலர் ஜீவிதா என்பவர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த போதை ஆசாமி ஒருவர்,  ஜீவிதாவை தகாத வார்த்தைகளில் பேசியதோடு அவரை தாக்கி அராஜகத்துல் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, ஜீவிதா அளித்த புகாரின்பேரில் போலீசார் போதை ஆசாமியை கைது செய்தனர்.

Night
Day