சென்னை: விலையுர்ந்த மிதிவண்டிகளை திருடும் பலே திருடன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஆலந்தூரில் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே   மதிவண்டியை திருடும் நபரின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆலந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த  சில நாட்களாக மதிவண்டிகள் திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து ஆலந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ஆலந்தூர் நிதி மேல் நிலை பள்ளி அருகே மர்ம நபர் ஒருவர் விலையுர்ந்த மிதிவண்டியை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதே நபர் பரங்கிமலை ரயில் நிலையம் பகுதியில் நிறுத்தபட்டிருந்த மிதிவண்டியை திருடி செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மிதிவண்டி திருடனை தேடி வருகின்றனர்.

Night
Day