சேலம்: தகாத உறவில் ஈடுபட்டு வீட்டைவிட்டு ஓடிய இருவர் தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் அருகே தகாத உறவால் ஊரைவிட்டு ஓடிய இருவர், பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். நீர்முள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்த முத்தமிழ் இளவரசி என்பவர் திருமணமாகிய நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, முத்தமிழ் இளவரசிக்கும், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும்  கடந்த 24ம் தேதி வீட்டில் இருந்து மாயமாகியுள்ளனர். இதுகுறித்து, முத்தமிழ் இளவரசியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனையறிந்த முத்தமிழ் இளவரசியும், சக்திவேலும் வீட்டிற்கு வந்த நிலையில், தகாத உறவு ஊருக்கு தெரிந்த அவமானத்தில் பூச்சிக்கொல்லி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

Night
Day