சேலம்: திமுக கவுன்சிலர் மீது காவல்நிலையத்தில் முதல் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி திமுக பேரூராட்சி தலைவி மற்றும் அவருடன் இருந்த பெண்கள் தன்னை தாக்‍கியதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தம்மம்பட்டி 4வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்‍கும் ராஜா, செந்தாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மேத்தா என்பவரை திருமணம் செய்து கொண்டு 10 வயதில் ஒரு மகள் இருப்பதாக கூறப்படுகிறது. ராஜா வெகு நாட்களாக வீட்டிற்கு வராததால், அவரது 2வது மனைவியும் தம்மம்பட்டி திமுக பேரூராட்சி  தலைவியுமான கவிதா வீட்டிற்கு சென்ற மேத்தா, ராஜா தனது வீட்டிற்கு வராதது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிதா, உடன் இருந்த பெண்களுடன் சேர்ந்து மேத்தாவை சரமாரியாக தாக்‍கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட மேத்தா, கணவரின் தூண்டுதலால் கவிதா தன்னை தாக்‍கியதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

Night
Day