சேலம்: மொபைல் கடையில் செல்போன் மற்றும் பணம் திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மொபைல் கடையில் செல்போன் மற்றும் பணத்தை  திருடிச் சென்ற நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியானது. அம்மம்பாளையம் அடுத்த காந்திபுரம் பகுதியை சேர்ந்த கவியரசன் என்பவர், அதே பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தார். இவர் நேற்றிரவு கடையை மூடி விட்டு, வீட்டுக்கு சென்றார். பின்னர் காலையில் வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் மற்றும் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day