ஜார்கண்ட்: சக ஆசிரியர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஆசிரியர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உடன் பணிபுரியும் இருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஆசிரியர் தன்னையும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொராயாஹட் பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் தான் இந்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. காலை 11 மணியளவில் பள்ளி இயங்கி கொண்டிருந்த நிலையில், பெண் ஆசிரியர் உள்ளிட்ட இருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஆசிரியர் தானும் சுட்டுக்கொண்டு படுகாயம் அடைந்தார். இருவரது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த ஆசிரியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

varient
Night
Day