ஜெயக்குமார் மரணம் - குடும்பத்தினரிடம் சிபிசிஐடி விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில், அவருடைய மனைவி, இரண்டு மகன்கள், மகள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். கடந்த 4ம் தேதி கரைசுத்துப்புதூர் கிராமத்தில் உள்ள  வீட்டருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்டது. இதுவரை துப்பு துலங்காத நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையின் 3வது நாளான இன்று என் ஜி ஓ காலனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின், மகள் கேத்தலின் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டது. 

Night
Day