ஜெயங்கொண்டத்தில் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் - சார்பதிவாளர் உள்ளிட்ட இருவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மற்றும் அலுவலக தற்காலிக பணியாளரை போலீசார் கைது செய்தனர். 

கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சாக்கரடீஸ் தனது நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ஜெயங்கொண்டம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றார். அப்போது சார்பதிவாளர் ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரைப்படி பணத்தை அலுவலக தற்காலிக பணியாளரிடம் வழங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர்

Night
Day