டெல்லி: பூங்காவில் அமர்ந்திருந்த இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்து கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி பூங்காவில் அமர்ந்திருந்த இளைஞரை கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து போலீசார் விசரணை மேற்கொண்டனர். மண்டலியாவில் சிஎன்ஜி கேஸ் ஸ்டேஷன், எதிரில் உள்ள டிடிஏ பூங்காவில் 32 வயதான நரேந்தர் என்ற நபர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது. மேலும் அவர் வைத்திருந்த பை மற்றும் செல்போனை அக்கும்பல் பறித்துச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day