மஸ்கட்டிலிருந்து தங்கம் கடத்தி வந்த விமான பணிப்பெண் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மஸ்கட்டில் இருந்து கேரளா வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வந்த விமான பணிப்பெண் கைது செய்யப்பட்டார். மஸ்கட்டில் இருந்து கண்ணூருக்கு ஏர் எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக பணியாளர்கள் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் விமான பணிப்பெண் சுரபி காதுனையும் சோதனை செய்ததில், மலக்குடலில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. 960 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சுரபி காதுனை கைது செய்தனர்.  

varient
Night
Day