தஞ்சாவூர்: பெண்ணிடம் தங்கச்செயின் பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் அருகே பட்ட பகலில் பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். பாபநாசம் அடுத்த கணபதி அக்ரஹாரம் பூஞ்சேரி மேலத்தெருவை சேர்ந்த பிரித்தா, தனது வீட்டின் பின்புறம் துணி துவைத்து  கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டின் பின்புறமாக வந்த 2 மர்ம நபர்கள் பிரித்தாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த மூன்றரை சவரன் தாலிசெயினை பறித்துக்கொண்டு அங்கிருந்த வாழை தோப்பு வழியாக தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day