தஞ்சை : மளிகை கடையில் செல்போனை திருடி சென்ற 2 இளைஞர்கள் - தேடுதல் வேட்டை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மளிகை கடையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆவணியாபுரத்தில் உள்ள மளிகை கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களில் ஒருவர் கடைக்குள் சென்று சில பொருட்களை கேட்டுள்ளார். அதனை எடுப்பதற்காக கடை உரிமையாளர் உள்ளே சென்ற போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த செல்போனை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது, நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் செல்போனை திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து திருநீலக்குடிபோலீசார் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.

Night
Day