தஞ்சை: மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே குடும்பத்தகராறில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவரை போலீசார் கைது செய்தனர். திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்த சத்யராஜ் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி கருத்து வேறுவாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க வந்த பரமேஸ்வரிக்கும் அங்கு வந்த கணவர் சத்யராஜிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  அப்போது ஆத்திரமடைந்த சத்யராஜ் தான் கையில் வைத்திருந்த கழிவறையை சுத்தம் செய்யும்  ஆசிட்டை பரமேஸ்வரி மீது ஊற்றிவிட்டு தப்பிச்சென்றார். வலியால் துடித்த பரமேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சத்யராஜ்யை கைது செய்தனர்.

Night
Day