தஞ்சை: வீட்டில் தோஷம் கழிப்பதாக கூறி நூதன முறையில் திருட்டு- இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே வீட்டில் தோஷம் இருப்பதாக கூறி இரண்டரை சவரன் தங்க நகையை திருடி சென்ற ஜோதிடரை போலீசார் கைது செய்தனர். அலவந்திபுரத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருடைய மனைவி கமலா. இவரது வீட்டருகே ஜோதிடர் போல் வந்த ஒரு இளைஞர், கமலாவை பார்த்து உங்கள் வீட்டில் தோஷம் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து தோஷம் கழிப்பதாக கூறி வீட்டினுள் புகுந்த அந்த இளைஞர், தங்கசங்கிலியை திருடி சென்றார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அம்மாப்பேட்டையை சேர்ந்த பாண்டி என்பவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர். 

Night
Day