தருமபுரி - முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சிறுவன் உடல் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் 16 வயது சிறுவன் உடலை போலீசார் மீட்டுள்ளனர். 

தாசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சிறுவன் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி சிறுவன் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்ட சிறுவன், பண்டஹள்ளி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பெருமாள் - குமுதா தம்பதியினரின் மகன் யாதவன் என்பது தெரியவந்தது. இந்நிலையில் பெற்றோர்களுக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக குமுதா பெற்றோர் வீட்டிற்கு மகனுடன் சென்ற நிலையில் , தந்தையை பார்த்து விட்டு வருவதாக சென்ற யாதவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Night
Day