தருமபுரி: இருவேறு இடங்களில் 8 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி அருகே இருவேறு இடங்களில் ஒரே இரவில் அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டல்பட்டி பகுதியில் உள்ள மருந்தகம், 2 கடைகள் உள்ளிட்ட 5 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து உரிமையாளர்கள் அளித்த புகாரின்படி போலீசார் நடத்திய விசாரணையில் 10 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதே போன்று சோகத்தூரில் 3 கடைகளின் பூட்டை உடைத்து 3 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

Night
Day