தருமபுரி: குடும்ப தகராறில் மனைவி தலையில் குளவிக்கல்லை போட்டு கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே குடும்ப தகராறில் மனைவி தலையில் குளவிக்கல்லை போட்டு கொன்ற கணவன் போலீசில் சரண் அடைந்தார். அதகப்பாடியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட வந்த நிலையில், இவருடன் வியாபாரத்திற்கு செல்ல மனைவி சீதா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் வியாபாரம் முடிந்து வீடு திரும்பிய ராஜமாணிக்கம், தூங்கிக் கொண்டிருந்த சீதா மீது குளவிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தவுடன் அங்கிருந்து தப்பிய ராஜமாணிக்கம், இண்டூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Night
Day